0 comments



வெற்று காகிதமானாலும் நம் கண்முன் தோன்றும் கணினியின் திரையானாலும்
கவிதை கனவுகளை உண்மையாக்க என்றும் முயற்சி செய்திருக்கிறோம்.
இதோ சமீப காலமாக ஜெர்மணியின் செந்தேன்மலர் கவிதை கவிக்குயில்
ராகினி பாஸ்கரன் அவர்களின் தொகுப்பு ஒலித்தொகுப்புக்களாகவும்,
அதுவும் நம் கனவுகளை உண்மையாக்கும் திரையிசை பாடல்களின் குத்தகைதாரர் வெள்ளைக்குயில் சுசில்லாம்மாவின் சுகந்தம் வீசும்
சுகமான குரலுடன் இரண்டும் சேர்ந்து நம் மனதை
என்னென்னவோ என்னென்னவோ எதிர்ப்பார்க்க வைக்கின்றன அவை
இன்னமும் இன்னமும் இது போன்ற குயில்கள் வராதா என்று.
திரையிசை தொகுப்பில் கவிதைகள் ஒலித்தாலும் அவைகளை
வரிவடிவமாக இங்கே பதிய முயற்சி செய்தும் விட்டு விட்டேன்
ஏனென்றால், கவிதையின் சாராம்சம் தட்டச்சு பிழையால்
தடம் மாற வாய்புகள் ஏராளம் என்பதால் ஆக்கத்தை உருவாக்கிய
அறிவிப்பாளரின் கொஞ்சும் குரலிலே கேட்டு மகிழ நேயர்களிடமே விட்டுவிட்டேன்.
இந்த இரு ஒலித்தொகுப்புக்களூம் ஜெர்மனி நாட்டின்
ஏகோபித்த அபிமானிகளை பெற்ற இ.டி.ஆர் வானொலியில்
வலம் வந்தவை இந்த கவிக்குரல் மற்றும் கவிக்குயில்
இருவரும் நீடுழி வாழ்ந்து இணைய நண்பர்களூக்கு
இனிய படைப்புக்களை வழங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஜெர்மனி, ராகினி பாஸ்கரன்

முதல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு >> மலர்கள் நனைந்தன பனியாலே >> என்னுயிர் தோழி கேளொரு சேதி.

Get this widget | Track details | eSnips Social DNA


இரண்டாவது தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

நான் உன்னை தேடுகிறேன் >> உன்னை உன்னை எண்ணி >> ஆயிரம் பெண்மை மலரட்டுமே >> உறவு சொல்ல ஒருவன்

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments




ஆதிபராசக்தி அம்ருதவர்ஷினி என்ற அழகான பாடல்

பாடல் இடம்பெற்ற திரை : பொன்னபுரம் கோட்டா
இசை: தேவராஜன் மாஸ்டர்
வரிகள்: வயலார்
குரல்கள்: யேசுதாஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா, மாதுரி, லீலா


குறிப்பாக மாதுரி சுசீலா பாடும் ஜதிஸ்வர பகுதி அருமை.

6 comments



இசையரசியின் இனிமையான தெரிவுகள்

இசையரசியின் அபிமானிகளே ரொம்ப நாள் கழித்து வந்துள்ளேன். இசையரசியின் இனிமையான பாடல்கள் எல்லோரும் கேட்ட பாடல்கள் தான். அவரின் வாழ்க்கை தகவல்களுடன், திரைப்படத்துடன் கொண்ட தகவல்களூடன். அற்புதமான ஒலித்தொகுப்பு சென்ற வாரத்தில் வானொலியில் ஒலிப்பரப்ப்பட்டது. அறிவிப்பாளர் மிகவும் அழகாக அவரின் தகவல்க்ளை தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. இதுபோல் ஒலித்தொகுப்புகள் இந்த தளத்தில் வந்துள்ளாதா என்று தெரியவில்லை? (ஜீரா சார், பிரபாசார் நீங்கதான் சொல்லனும்)இந்த பதிவு வரும் நாள் என் திருப்பூர் அன்பர் திரு. அகிலா விஜயகுமார் அவர்கள் மூலம் என்னிடம் இசையரசி பற்று சில தகவல்கள் கேட்டார்கள். நான் இணையத்தில் தேடி பிடித்து உடனே அனுப்பிவைத்தேன். அறிவிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இசையன்பர்களே ஒலித்தொகுப்பை கேட்டு உங்கள் மேலான உணர்வுகளை ஒரு வரியில் எழுதுங்கள். ஆக்கத்தை உருவாக்கியவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இசையரசியின் ரசிகர்கள் சார்பாக. ஆக்கத்தை உருவாக்கிய அறிவிப்பாளர் தொண்டாமுத்தூர் திரு. ரவி அவர்களூக்கு வாழ்த்துக்கள். நன்றி.

குறிப்பு: ஒலிக்கோப்பின் நீளம் அதிகம் ஆகையால் தரவிறக்கம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இசையன்பர்கள் இசையரசியின் மழையில் மறுபடியும் நனைய வாருங்கள் என்று அழைக்கின்றேன். கோவை ரவி

Get this widget | Track details | eSnips Social DNA

7 comments

நீண்ட நாட்களாக இசையரசி பதிவு வெறுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு இனிய பாடலுடன் இந்த இடைவெளியை நிரப்புகின்றேன். இந்தப் பதிவு இசையரசி பி.சுசீலாவுடன் எஸ்.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ஒரு ஜோடிப் பாடல்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லி விடலாம், பாடல்கள் சிறப்பாக, இனிமையாக இருக்கும் என்று. ஆர்.சுந்தரராஜன் இளையராஜாவோடு கூட்டணி சேரும் போது மட்டுமல்ல, தேவாவோடு "என் ஆசை மச்சான்" போன்ற படங்களில் இணைந்தபோதும், "அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை" திரைப்படத்தில் கே.வி.மகாதேவனோடு இணைந்தபோதும் கூட அந்தச் சிறப்பு இருந்தது.

சரணாலயம் திரைப்படம் ஆர்.சுந்தராஜன், எம்.எஸ்விஸ்வநாதனோடு இணைந்து பணியாற்றிய வந்த அருமையான பாடல்களோடு வந்த படமாகும். குறிப்பாக நான் இங்கு தரும் "நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு" பாடலைக் கேளுங்கள், உண்மை புரியும். எம்.எஸ்.வி எண்பதுகளிலும் சோர்ந்து விடவில்லை என்பதற்கு இப்படியான பாடல்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

Nedunaal aasai - SPB P.Suseelaa

9 comments

இவரை வில்லியாகத்தான் நிறையப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அல்லது சிங்காரிச் சரக்கு மாதிரி பாடல்களில் கவர்ச்சியாகத்தான் பார்த்திருப்பீர்கள். ஆம். நடிகை ஒய்.விஜயாவைத்தான் சொல்கிறேன்.




சில நடிகைகள் வில்லிகளாகவே வாழ்ந்து விடுகிறார்கள். சி.கே.சரஸ்வதிக்குப் பிறகு ஒய்.விஜயாவிற்கு அந்த வாய்ப்பு. ஆனாலும் இவருக்கும் ஒரு இனிய பாடலும் பாத்திரமும் ஒரு சில படங்களில் கிடைத்திருக்கின்றன.

அப்படியொரு படமே "அவர் எனக்கே சொந்தம்". ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் பெரிய பாத்திரங்கள் ஏற்று நடித்த படத்தில் கைம்பெண் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஒய்.விஜயா. ஒரு குழந்தைக்குத் தாய்ப் பாத்திரத்தில் நடித்த அவருக்கு இளையராஜாவின் இசையில் ஒரு இனிய பாடலும் கூட உண்டு. ஆம். இசையரசியின் அமுதக் குரலில் "தேனில் ஆடும் ரோஜா" என்று பாடிக் குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறார். இந்த இனிய பாடலைக் கண்டும் கேட்டும் ரசியுங்கள்.



சென்னையில் இந்தப் படத்தில் ஒளித்தகடு கிடைத்ததும் வாங்கி விட்டேன். பாடல்கள் அனைத்தையும் வலையேற்றியும் விட்டேன். இந்தப் படத்தில் தொலினேனு ஜேயு என்ற தியாகராஜர் கீர்த்தனையையும் கபிகபி மேரே தில் மே என்ற பாடலையும் டி.எம்.சௌந்தரராஜனை நகைச்சுவை நையாண்டியோடு பாட வைத்திருக்கிறார் இளையராஜா. அதற்கு நடித்திருப்பவர் வி.கே.ராமசாமி. பாட்டைக் கேளுங்கள். இலவசமாக அந்தப் பாடலையும் இங்கேயே தருகிறேன்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

1 comments

இசையரசியும் தாலாட்டும் - பாகம் 2

தாலாட்டு என்ன குழந்தைக்கு மட்டும் சொந்தமா
இல்லை என்கிறார் ஒரு கணவர். ஆம் ஆதர்ஸ மனைவி கணவனுக்காக பாடும் தாலாட்டாக ஒரு பாடல். எந்த பாடல் என்று யூகிக்கமுடிகிறதா ம்ம்ம்

"நீ மதி சல்லகா சுவாமி நிதுரபோ" என்ற தெலுங்குப்பாடல் அது

பிரபல ஹிந்திப்பாடலான கில்தேஹை குல் யஹான் மெட்டை தமிழிலும் தெலுங்கிலும் பாடியவர் இசையரசி

தமிழில் ராதையின் நெஞ்சமே , தெலுங்கில் நீ மதி சல்லகா. ஹிந்தியில் லதா காட்டிய அதே இனிமையை இசையரசி தமிழிலும் தெலுங்கிலும் மேலும் ஒரு படி கூடியாவறு பாடியிருப்பார்

அன்பான மனைவி ஜமுனா தன் கணவர் என்.டி.ஆரை தூங்கச்செய்யும் பாடல் இது

கண்டு மகிழுங்கள்





தாய் தாலாட்டு பாடுவது இயல்பு. கல்யாணமாகாத பெண் தாலாட்டு பாடுவதென்றால் எப்படி. அப்படி ஒரு சூழல்தான் இங்கே ஒரு பெண்ணுக்கு. கல்யாணம் ஆகவில்லை ஆனால் தன் காதலனின் பிள்ளை என்று சொல்லிக்கொண்டு ஒரு பையன் வந்து நிற்க தன் காதலனின் மீது கொண்ட நம்பிக்கையால் அவனுக்கு உதவ அப்படித்தான் அந்த பையனை தன் வீட்டிற்கு தன் காதலன் கொண்டுவந்து விட அவனது சுட்டித்தனத்தை சமாளித்து அவனை தூங்கச்செய்கிறாள் இந்த பெண். அப்படி ஒரு குறும்பான தாலாட்டு தான் " தந்தை யாரோ தாயும் யாரோ " என்ற யார் பையன் திரைப்படப்பாடல். சாவித்திரியும் டெய்ஸி ராணியும் அழகாக நடித்திருப்பர். இசையரசி குறும்பு குறையாமல் பாடியிருப்பார் அதுவும் "தூங்குடா"என்று சொல்லும் அந்த செல்ல்க்கோபம் அழகோ அழகு.

படம்: யார் பையன்
இசை: சலபதிராவ்
வரிகள் : மருதகாசி

http://psusheela.org/audio/ra/tamil/...aresong023.ram


தாய்மை உணர்வு அற்புதமானது. ஒவ்வொரு தாயும் எந்த சூழலிலும் தன் பிள்ளைகளின் நலனைப்பற்றியே
சிந்திப்பாள். இங்கும் அப்படித்தான் ஒரு தாய் இருக்கிறாள். ஆம் மன நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போதும் அவள் நினைவெல்லாம் தன் பிள்ளையை சுற்றியே அவனுக்கு தாலாட்டு பாடுவதாக இங்கே அழகான தாலாட்டை பாடுகிறாள். இசையரசியின் குரலில் பாடலை கண்டு மகிழுங்கள்

" முத்துலா மா பாபு"
ஜீவன ஜோதி என்னும் திரையில் ஒலிக்கும் பாடல் இது. வாணிஸ்ரீ பிரமாதமாக நடித்த படம் இது.



மலையாள திரையில் எத்தனையோ இனிமையான தாலாட்டுப்பாடல்கள் உள்ளன அவற்றில் இதுவும் முக்கிய ஒன்றாகும்.
சலீல் செளத்ரியின் இசையில், வயலாரின் வரிகளை இசைக்கிறார் இசைக்குயில் ராகம் திரைப்படத்திற்காக.

இவர்கள் மூவரும் சேர்ந்து பாடலை இனிமையாக்குகிறார்கள் என்றால் அளவான அழகான நடிப்பார் ஊர்வசி சாரதா திரையில் மெருகேற்றுகிறார்.

" ஓமன திங்கள் பக்ஷி " என்ற பாடல் தான் அது. இந்த இனிமையன மெட்டுக்கு எந்த மனமும் கண்மூடத்தானே செய்யும்

http://www.youtube.com/watch?v=33x_pOHxdzk

5 comments



மணிமண்டபம் படத்தில் சுசீலாம்மாவின் கொஞ்சும் குரலில் ஓர் பழைய்ய்ய்ய்ய்ய்ய இனிமையான அற்புதமான வரிகளில் இந்த பாடல் ரொம்ப நாள் கழித்து எனக்கு கிடைத்தது நானும் ரொம்ப நாள் கழித்து இந்த தளத்தில் பதிகின்றேன் இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுங்கள்.

படம்: மணிமண்டபம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: ஸ்வரப்ரம்மா கே.வி.மஹாதேவன்

போட்டோ உதவி : நன்றி, இண்டியாக்ளிட்ஸ்.காம்

Get this widget | Track details | eSnips Social DNA



உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
ஹ ஹ ஹ் ஹஹஹஹ

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

பகலும் வரும் உடனே இரவு வரும்
பகலும் வரும் உடனே இரவு வரும்

பழக வரும் துணையும் விலகி விடும்
பழக வரும் துணையும் விலகி விடும்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்

தாழ்வதோ சிலநாள் மனம் வாடுவதே பலநாள்
தாழ்வதோ சிலநாள் மனம் வாழடுவதே பலநாள்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

சென்றதெல்லாம் வருமோ அதை சிந்தனை தான் தருமோ
வந்ததை யார் தடுப்பார் இனி வருவதை யார் மறுப்பார்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

இமைகளை மூடிடுவோம் ..ஓஓஓஓஓஓஒ
துயர்களை மூடிடுவோம் ஆஆஆஆஆ
இமைகளை மூடிடுவோம் துயர்களை மூடிடுவோம்

மறுபடியும் விழித்தால் மனிதரைப் போல் பிறப்போம்
மறுபடியும் விழித்தால் புதுமனிதரைப் போல் பிறப்போம்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
பழக வரும் துணையும் விலகி விடும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்